Thursday, January 7, 2016

தமிழ்க் கணிமை வரலாற்றில் மகிழ்ச்சிதரும் முன்னேற்றங்கள்

14 அக்டோபர் 2015 12:00 PM

 2015, 2016ம் ஆண்டுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில் மகிழ்ச்சிதரும் முன்னேற்றங்களைத் தந்த ஆண்டுகளாக இருக்கப்போகின்றன போலத்தான் தோன்றுகிறது. 95% இற்கும் மேல் சரியாக எழுத்துக்களை உணரும் கூகிளின் எழுத்துணரி, தமிழில் எழுதப்பட்டவற்றை இயல்பான குரலில் உரத்துப்படிக்கும் குரற்தொகுப்பி என முக்கிய வரவுகள் நிகழ்கின்றன.

எழுத்துணரியும் குரற்தொகுப்பியும் (Speech synthesizer) தமிழ்க்கணிமை ஆவலர்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நுட்பங்கள். இவ்வாண்டு இரண்டுமே நாம் எதிர்பார்த்ததை விடச் செம்மையானவையாக வெளிவந்திருக்கின்றன.

http://www.ssn.edu.in/Speech_Lab/Speech_home.html

No comments:

Post a Comment