12 அக்டோபர் 2015 04:04 PM
ஐசுலாந்தின் மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு துனீசியாவில் பெரும் மக்கள்
எழுச்சி நடந்த வேளை அவ் எழுச்சியை நான் ஆதரவுடனேயே நோக்கினேன். பின்னர்
அரபு வசந்தம் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து
லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் எழுச்சி நிகழ்ந்தபோது அரபு வசந்தம் தனது
உண்மையான முகத்தினைக் காட்டியது. அது அமெரிக்க வசந்தம் தான் என்பது
உறுதியானது.
ஆனாலும் அதன் பிறகும் துனீசியாவில் நிகழ்ந்த எழுச்சி
பற்றி நல்ல கருத்தே இருந்துவந்தது. இப்போது துனீசிய எழுச்சியின்
பின்னணியில் இருந்தவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு என் எண்ணத்தை முழுவதுமாக
மாற்றிவிட்டது. இப்போது துனீசிய எழுச்சியையும் நான் நம்புவதற்கில்லை.
சமாதானத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட எவரைத்தான் இப்போது நம்ப முடியும்?
ஆண்டொன்றில் அமெரிக்காவுக்கும் உலகக் கார்ப்பரேட்டுக்களுக்கு சார்பான
அரசியலை எவர் மிகவும் கயமையாகவும் நல்ல முகமூடியுடனும் முன்னெடுத்தார்
என்று அறிவதற்கு அவ்வாண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு யாருக்கு
வழங்கப்பட்டது என்று பார்த்தாலே போதுமானது போல் இருக்கிறது.
No comments:
Post a Comment