காவற்துறை நண்பர்களுக்கு,
நண்பா, பெண்பிள்ளைகளையும் பொடியன்களையும் அடிப்பதற்கான கட்டளைகள் மேலிடத்தில் இருந்து தான் வருகின்றன என்பது எனக்குத் தெரியும்.
அப்படியிருந்தும் ஏனப்பா இவ்வளவு வெறியும் பழியுணர்ச்சியும்?
ஓடுகிற பொடியன்களையும் தள்ளி விழுத்தி, மண்டையை உடைத்து, குருதி வழி வழிய ஏன் அடிக்கிறாய்?
கையிலிருக்கு பொல்லுக்கட்டை உடையும் வரை பெண்பிள்ளைகளுக்கு அடிக்காதே நண்பா.
அவர்களுக்கு இந்த அடியையும் உதையையும் தாங்கிக்கொள்வது சிரமம்.
உங்களுக்கெல்லாம் கூடப்பிறந்தவர்கள் இல்லையா?
இந்தப் பெண்பிள்ளைகளும் பொடியன்களும் போராடி வென்றெடுக்கும் நன்மைகளை எல்லாம் என்றாவது ஒரு நாள் உங்களுடைய பிள்ளைகளும்தான் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை மறந்துவிடாதே..
பெரிய பெரிய அதிகாரிகளதும் அரசியல்வாதிகளதும் பிள்ளைகளுக்கு அந் நன்மைகள் எதுவுமே தேவைப்படாது நண்பா..
-கஜூவத்தை ஐக்கிய கிரிக்கட் சங்கம்
தமிழில் : மு. மயூரன்
No comments:
Post a Comment