[Facebook உரையாடல்]
மக்களுக்கும்
அவர்களுள் ஒரு பகுதியான மாணவர்களுக்கும் கோபம் வருவது இயற்கை. ஒரே கோபம்
பலருக்குக் கூட்டாக வரும்போது அது அரசியற் பெறுமதி கொண்ட கோபமாக,
உணர்வெழுச்சியாக மாறுகிறது. மக்களுக்கு வரும் இந்தக் கோபம் நல்ல
நோக்கத்தோடுதான் வரவேண்டுமென்றில்லை. சக மனிதர்கள், சிறுபான்மைகள்,
மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், மத மறுப்ப்பாளர்கள் மேலெல்லாம் மக்களுக்குக்
கூட்டாகக் கோபம் வரலாம். தவறான பிரசாரங்கள் நன்கு எடுபட்டுப்போய்க் கோபம்
வரலாம்.