தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றினை இலங்கையில் ஏற்படுத்த, அல்லது இலங்கை அரசினை அச்சுறுத்தித் தமது திட்டங்களை இலங்கையில் நடத்திச்செல்ல இந்தப் போர்க்குற்ற விவகாரத்தை வல்லரசுகள் கையிலெடுக்கின்றன.
இலங்கையின் அரசபடைகள் நடத்திய படுகொலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்துவந்த அதே வல்லரசுகள் தாம் இன்று போர்க்குற்றம் என்ற பகடைக்காயைத் தூக்கிக்கொண்டு ஐநாவில் விளையாடுகின்றன.