Tuesday, January 29, 2013

கலையும் தணிக்கையும்

ஒரு கலைப்படைப்புக்கு தணிக்கை விதிகளே இருக்கக்கூடாது என்கிற பொத்தம்பொதுவான கருத்து அழகான ஒரு கற்பனை தான். ஆனால் நடைமுறை இவ்வழகிய கற்பனையைச் சாத்தியமற்றதாக்குகிறது.

கலைப்படைப்பொன்று பொதுவெளிக்கு மக்கள் பார்வைக்கு வரும்போது அது சமூகத்தோடு வினைபுரிகிறது. எந்தவொரு உற்பத்திப்பொருளையும்போல கலையும் ஓர் உற்பத்திப்பொருளே.

உன்னைப்போலொருவனும் விசுவரூபமும்

"உன்னைப்போல் ஒருவ"னில் நீ என்னை அவமானப்படுத்தினாய். ஒடுக்குமுறைக்குள்ளாகும் எனது/எமது நியாயங்களைக் கேவலப்படுத்தியும் திரித்தும் படமெடுத்தாய். என்னை/எம்மை ஒடுக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் வாலைப்பிடித்துக்கொண்டு அதனைப் போற்றித்துதித்தாய். அந்த அதிகார வர்க்கத்தின் எடுபிடி ஊடகங்கள் உன்னை தூக்கி வைத்துக் கொண்டாடின.
அப்போது உன்னைத் தண்டிக்கவும் திருப்பி அடிக்கவும் என்னிடம் எழுத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

இப்போது நீ தண்டிக்கப்படும்போது உனது நியாயங்கள் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் உனக்கு என்னால் தரமுடியாமற்போன தண்டனையும், நீ என்னைக் கேவலப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. அதனால் என்னால் "நடுநிலையாக" சிந்திக்க முடியாது. நீ தண்டிக்கப்படுவதாய் எண்ணுகையில் நான் மகிழ்கிறேன்.

இந்திய அதிகாரவர்க்கத்துக்கு எதிரானவர்களை விசாரணை இன்றிக் கரப்பான் பூச்சியைப்போல நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றாய். இப்போது படத்தைப் பார்க்காமலே உன்னை அடித்து நொறுக்கும் "நியாயத்தை" நான் எதிர்க்காமலிருக்கவேண்டியதாகிறது.

இந்த எதிர்ப்பும் ஒரு நாடகமாக இருக்கலாம் என்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் உணர்ந்தவனாக, உன்னை ஆதரிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி ரசிகர்களுக்காக இதனை நான் சொல்லவேண்டியவனாகிறேன்.

Thursday, January 24, 2013

கடவுள்

நண்பன்:-- இந்த உலகில் கடவுள் இல்லை


நான்:--ஏன் ???


நண்பன்:--இன்றுவரை யார் கண்ணுக்கும் புலப்பட்டதே இல்லை


நான்:-- இந்த உலகில் WIFI , BLUE TOOTH இருக்கா ????


நண்பன்:--இருக்கு நான் USE பண்றனே


நான் :---எங்க காட்டுங்க ??


நண்பன் :--@@@******$$$$???????????????????????


#இருக்கு ஆனா இல்லை
 
 
 காற்று கண்ணுக்குத் தெரிகிறதா? அதுபோல் கடவுளும் கண்ணுக்குத் தெரியமாட்டார் என்ற பழங்காலத்து வாதத்தைத்தான் இங்கே புதிய வடிவில் பார்க்கிறோம். வித்தியாசம் எதுவுமில்லை.

கடவுள் விடயத்துக்கும் காற்று, ரேடியோ அலைகள், Wifi விடயத்துக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு.

Saturday, January 19, 2013

FLSP எனும் நிகழ்வு

//
இப்போ ஒண்றுபட்ட போராட்டம் என பல அமைப்புக்கள் முளைத்துள்ளது. இது ஒரு சந்தோசமான் விடயம் கூட , ஆனால் ஒரு சின்ன சந்தேகம் முள்ளிவாய்க்காலலில் மக்களை கூட்டி ஒதுக்கி சுறிவளைத்து செல் அடித்தபோது படுகொலைக்கு எதிராக ஒரு குரல் தெற்கில் இருந்து எழுமா என ஏங்கியவர்களுக்கு இப் பொற்காலத்தை நம்புவது கஸ்டமாக உள்ளது.மேலும் ஒரு அமைப்பியல் மாற்றத்தை மறுப்பது (அதிகாரப் பகிர்வு)மற்றும் வெறும் இனங்களிடையே யான நல் இனக்கம் என்னும் வெறும் கருத்தை மாத்திரம் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்ப முயற்சிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை “தோற்ற தமிழன்தான்” நல்ல தோழமைத்தமிழன் என இந்த முற்போக்குகள் நினக்கிறார்களோ என்னவோ?//
உங்களுடைய இந்த விமர்சனம் FLSP, அதன் தோழமை அமைப்பான "சம உரிமை இயக்கம்" ஆகியவற்றைக் குறித்தே முன்வைக்கப்பட்டுள்ளது.

JVP இலிருந்து FLSP பிரிந்தபொழுது நானும் நான் சார்ந்துள்ள அமைப்புக்களும் அவர்களை JVP இன் ஒரு நீட்சியாகவே மட்டுக்கட்டினோம். அவர்கள் மீதான காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தோம்.

காலவோட்டத்தில் அவர்களுடனான தொடர்பாடல் முன்னேற்றமடைந்தபோது அவர்களை முப்பரிமாணமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.