இம்முறை மேதினத்தில் நாம் அனைவரும் ஆற்றவேண்டிய
அரசியற் கடமை ஒன்று உண்டு. நேர்மையான இடதுசாரிக் கட்சிகளுக்கான எமது
ஆதரவினை நாம் உரத்துச் சொல்வதற்கு இச்சந்தர்ப்பத்த ினைப் பயன்படுத்தவேண்ட ியவர்களாய் உள்ளோம்.
தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் என்பதற்கும் மேலாக, ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்குமான போராட்டமாக, எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக ்கும் எதிரான போராட்டமாக மேதின நடவடிக்கைகள் இன்று மாற்றம் கண்டுள்ளன.
"அரசியல்" என்று சொன்னாலே எமக்கு பாராளுமன்ற இருக்கைகளுக்கான
தேர்தல்களும் அதற்கான வாக்குவங்கி அரசியலும் தான் நினைவுக்கு வருமளவுக்கு
அவலமான சூழல் நிலவுகிறது. இந்த வாக்குவங்கி அரசியல்வாதிகள் தமது
நலன்களுக்காகவும ் அதிகாரத்திற்காக வும் பணத்திற்காகவும் வாக்குவங்கிகளைத ் தக்கவைத்துக்கொள ்ளும் வித்தைகளைத் தான் நாம் "அரசியல்" என்று நம்பவைக்கப்படுக ிறோம்.
இந்த சுயநல அரசியல்வாதிகளும ் மேதினத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொள்கி றார்கள்.
தம்முடைய சொந்த நலன்களுக்காக அப்பாவி உழைக்கும் மக்களைச் சடப்பொருட்கள்
போலத் திரட்டிப் போதையூட்டி, பணத்தாசை காட்டி மேதினக் கூட்டங்களை
நடத்துகிறார்கள் . இந்தச் சுயநலக்காரர்களி ன் கைகளைப் பலப்படுத்தி மக்கள் கண்ட நன்மைகள் எதுவுமில்லை. மாறாக எம்மாற் பலப்படுத்தப்பட் ட அந்தக்கைகளே எம்மை அடித்து நொறுக்கி ஒடுக்கி நிற்கின்றன.
மக்கள் அரசியல் என்பது இந்த வாக்குவங்கி அரசியலுக்கு எதிரானது. மக்களை வெறும் மந்தைகள் போல எண்ணாமல், நடத்தாமல், மக்களை அரசியல் விழிப்புணர்வூட் டி மக்களை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலாகும். மக்கள் அரசியல் அதிகாரங்களுக்கு எதிரான போராட்டமாகும்.
மக்கள் மீதான அதிகாரத்துக்கு மாற்றாக, மக்களுடைய அதிகாரத்தைக் கொண்டுவரும் போராட்டமே இன்று மிகவும் அவசியப்படும் அரசியல் நடவடிக்கையாக இருக்கிறது.
அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக ்கும் எதிரானவர்களாக, வரலாறெங்கும் சுயநல நோக்கங்களுக்காக வன்றி, மக்கள் நல நோக்கங்களுக்காக மட்டுமே செயற்பட்டுவரும் அரசியற் சக்திகளை நாம் ஆதரிக்க வேண்டாமா ? சுயநலக்காரர்களு க்குப் பின்னால் போகும் மக்கள் கூட்டம் ஏன் மக்களுக்காகப் போராடும் சக்திகளுக்குப் பின்னால் இல்லை? இது எமக்கெல்லாம் தலைகுனிவில்லையா ?
இம்முறை மேதினத்தில் நாம் ஒரு முடிவோடு ஒன்றிணைவோம்.
வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, மதவெறி, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, சூழல் மீதான சுரண்டல் எல்லாவற்றுக்கும ் எதிராக எமக்காகக் குரல் கொடுத்து எம்மோடு இணைந்து நின்றவர்கள் எவரோ, அவர்களோடு அணிதிரள்வோம்.
பாதாள உலகத்தையும் போதை மருந்து இராச்சியத்தையும ் கறுப்புப் பணத்தையும் ஆயுதப்படைகளையும ்
இனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்பவர்களை மறுத்து, மக்களை
நம்பி மக்களோடு நிற்கும் அரசியற் சக்திகளை இனங்கண்டு ஆதரிப்போம்.
இவ்வாறு மக்களுக்காக மக்களோடு நிற்பவர்கள் நேர்மையான இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே என்பதை நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் அனைவரும் நன்கறிவர். நேர்மையான இடதுசாரிக் கட்சிகளின் மேதினக் கூட்டங்களும் பேரணிகளும் எமது பிரதேசங்களில் நடக்கும்போது அதில்கலந்துகொண் டு அக்கட்சிகளைப் பலப்படுத்துவோம் .
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி (New Democratic Marxist Leninist Party) தனது மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் இம்முறை மூன்று மாவட்டங்களில் நடத்துகிறது. முடிந்தவரை அவர்களோடு இணைந்துகொள்ள வாருங்கள்.
மலையகத்தில் மாத்தளை, யாழ்ப்பாணத்தில் புத்தூர், வன்னியில் வவுனியா ஆகிய இடங்களில் மேதினப் பேரணிகள் ஒழுங்குசெய்யப்ப ட்டுள்ளன.
தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் என்பதற்கும் மேலாக, ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்குமான போராட்டமாக, எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக
"அரசியல்" என்று சொன்னாலே எமக்கு பாராளுமன்ற இருக்கைகளுக்கான
இந்த சுயநல அரசியல்வாதிகளும
மக்கள் அரசியல் என்பது இந்த வாக்குவங்கி அரசியலுக்கு எதிரானது. மக்களை வெறும் மந்தைகள் போல எண்ணாமல், நடத்தாமல், மக்களை அரசியல் விழிப்புணர்வூட்
மக்கள் மீதான அதிகாரத்துக்கு மாற்றாக, மக்களுடைய அதிகாரத்தைக் கொண்டுவரும் போராட்டமே இன்று மிகவும் அவசியப்படும் அரசியல் நடவடிக்கையாக இருக்கிறது.
அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக
இம்முறை மேதினத்தில் நாம் ஒரு முடிவோடு ஒன்றிணைவோம்.
வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, மதவெறி, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, சூழல் மீதான சுரண்டல் எல்லாவற்றுக்கும
பாதாள உலகத்தையும் போதை மருந்து இராச்சியத்தையும
இவ்வாறு மக்களுக்காக மக்களோடு நிற்பவர்கள் நேர்மையான இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே என்பதை நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் அனைவரும் நன்கறிவர். நேர்மையான இடதுசாரிக் கட்சிகளின் மேதினக் கூட்டங்களும் பேரணிகளும் எமது பிரதேசங்களில் நடக்கும்போது அதில்கலந்துகொண்
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி (New Democratic Marxist Leninist Party) தனது மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் இம்முறை மூன்று மாவட்டங்களில் நடத்துகிறது. முடிந்தவரை அவர்களோடு இணைந்துகொள்ள வாருங்கள்.
மலையகத்தில் மாத்தளை, யாழ்ப்பாணத்தில்
No comments:
Post a Comment