காலம் மாறும்போது, புறச்சூழல் மாறும்போது கலைவடிவங்களும் மாற்றங்களுக்குள
விசுவநாதன் மூலம் நிகழ்ந்த பாய்ச்சல் என்ன?
விசுவநாதன் - இராமமூர்த்தி இரட்டையர்களுக்க
தமிழ்த் திரையிசையில் மெல்லிசையைப் பொதுப்போக்காக மாற்றிய பாய்ச்சலைத்தான்
செவ்வியல் மேடை நாடகங்கள் அப்படியே சினிமாவாக மாற்றம் கண்ட தமிழ்ச்சூழலில் அம் மேடை நாடகங்களைப்போன்
சினிமா ஒரு பெரும் வணிகமாக மாறி அது புதிய சந்தைகளைத் திறந்துகொண்டு பேருருக்கொண்ட போது, அதனை எல்லா மக்களும் நுகர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுதொகையினருக்
இவ்வாறானதொரு சூழலிற் தான் விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்களின் பாடல்கள் செவ்வியல் விதிகளை உடைத்துக்கொண்டு
செவ்வியல் இராகங்களில் வழக்கத்துக்கு மாறான "அந்நிய ஸ்வரங்களின்" பயன்பாடு, இராகங்களை அவற்றுக்குரிய மரபிலிருந்து விலகி புதிய சாத்தியங்களுடன்
கலை வடிவங்களில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவர்கள
மணி மணிவண்ணன்
மரபிசை அல்லது செவ்விசை தெரிந்தவர்கள் வெகுசிலரே என்பது பிற்காலத்தில் நடந்தது. தமிழ்த்திரையின்தொடக்க காலத்தில் நாடெங்கும் தெரிந்த இசை மரபிசை. மக்கள் பண்களையும் பிரித்தறியும் அறிவு கொண்டவர்களாக இருந்தனர். அந்தக் காலத்தில் மிகப்பெரும் பாடகர்களாக இருந்த பாகவதர், கிட்டப்பா, சுந்தராம்பாள் போன்றவர்களும், நாடக நடிகர்களும் பொதுமக்களிடையே பரவலாக வரவேற்பு பெற்றிருந்தார்க ள். இது தமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையிலும் இதே தாரகைகளுக்கு இதே போன்ற வரவேற்பு இருந்தது. நாதசுரச் சக்கரவர்த்தியாக த் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களைப் பற்றிய செவி வழிக்கதை ஒன்று உண்டு. அவர் கோவில் ஊர்வலத்தில் நடந்து கொண்டே நாதசுரம் வாசித்ததைக் கேட்டு மெய்மறந்து போன பெட்ரோமேக்ஸ் விளக்குக்காரர் ஒருவர் மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். இவ்வளவு தெய்வீகமான இசையை இவ்வளவு அருகில் இருந்து கேட்க முடிந்தது என் பேறல்லவா என்று பிள்ளையவர்களை அவர் பாராட்டியதை அந்த ஊர் செல்வந்தர்களிடம ் அவர் பெற்ற தங்கப் பதக்கத்தைக் காட்டிலும் மேலான பாராட்டாகப் பிள்ளையவர்கள் எடுத்துக் கொண்டாராம். மரபிசையிலிருந்த ு மெல்லிசைக்கும் மாறிய சமயத்தில்தான் தமிழ் மக்களிடையும் மரபிசை கற்றுக் கொள்ளும் பழக்கம் நலிந்திருக்க வேண்டும். அல்லது புதியது பற்றிய ஆர்வத்தால் பழையதை உதறும் தமிழர் பழக்கத்தால் அது நேர்ந்திருக்கலா ம்.
மணி மணிவண்ணன்
இதைக் கொஞ்சம் நோண்டிப் பார்க்க வேண்டும். விசுவநாதன் ராமமூர்த்திக்குமுன்னரே மெல்லிசையும் மேற்கத்திய இசையும் தமிழ்ப்படங்களில ் புகுந்து விட்டிருந்தன என்று நினைக்கிறேன். K. V. மகாதேவன் 1942 வாக்கில் திரையிசையிக்கு வந்து விட்டார். விஸ்வநாதன் ராமமூர்த்தி 1952ல்தான் இசையமைக்க வந்தார்கள். மரபிசையை மழுங்க வைத்ததில் எல்லீஸ் டன்கனின் தாக்கம் ஏதாவது இருந்ததா என்றும் பார்க்க வேண்டும். ஒருவேளை இதே போன்ற மாற்றங்கள் இந்தியாவெங்கும் ஒரே நேரத்தில் தோன்றியிருக்கலா ம். மரபிசையைக் காட்டிலும் மேற்கத்திய மெல்லிசை மாடர்னாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தீர்மானித்திருக ்கலாம்.
Muralitharan Mauran
நான் அறிந்ததை வைத்துக்கொண்டு பார்க்கும்போது இந்தியில் மெல்லிசையின் வரவும் வெற்றியும் தமிழில் இம்மாற்றத்தைக் கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. கூடவே நீங்கள் சொன்னதுபோல மேற்கத்தைய மெல்லிசையின்/ வணிக இசையின் அறிமுகமும் பரவலும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம ். மணி மணிவண்ணன்
கே. வி. மகாதேவன் வருகைக்கு முன்னால் படங்களில் நாடகங்களைப் போலவே எண்ணற்ற பல பாடல்கள் இருந்தன. எல்லீஸ் டன்கன் மேற்கத்தியப் படங்களைப் போல் மாற்ற முயன்று பாடல்களின் எண்ணிக்கையையும்குறைத்தார். பின்னணி இசையில்தான் முதலில் மெல்லிசை பயன்பட்டிருக்க வேண்டும். இதைப் பற்றி முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், மொத்த இந்தியத் திரைப்பட வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த தமிழ்த்திரை வரலாற்றாசிரியர் களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
No comments:
Post a Comment