Friday, July 17, 2015

செல்லவேல் ஆசிரியரின் மறைவு

"செல்லவேல்" என்ற பெயரை "லம்போதரன் செல்லவேல்" ஆகக் கேள்விப்பட்டநேரம் அவராயிருக்கும் என்று தோன்றவில்லை. இன்று காலை அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தப் போனபோதுதான் தெரிந்துகொண்டேன், அவர்தான் "உயிரியல்" செல்லவேல் என்று.

வாழ்க்கையில் நான் சந்திக்கவேண்டும் என எண்ணியிருந்த எழுத்தாளர்களுள் அவரும் ஒருவர். ஏனையவர்களை விட இவர் சற்று வேறுபட்டவர். இவர் பாடக்குறிப்புக்கள் எழுதுபவர்.

உயர்தரம் படித்துக்கொண்டிருந்தபோது நான் ஒழுங்காக வகுப்புக்களுக்குப் போனதில்லை. நேர்த்தியாகப் பாடக்குறிப்புக்களைப் பேணியதுமில்லை. இறுதித் தேர்வுக்கு நான் என்னை ஆயத்தப்படுத்தவும் ஒவ்வொரு தவணைத்தேர்வுகளுக்கும் என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும் நான் முழுமையாக நம்பியிருந்தது செல்லவேல் எழுதிய பச்சை நிற, மஞ்சள் நிற, நீல நிற உயிரியல் பாடப் புத்தகங்களையே.

அவரது பாடக் குறிப்புக்களில் இருந்த சிறப்பு, ஓர் ஆசிரியர் இல்லாமலேயே அதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் என்பது தான். கொழும்புக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் படித்த எல்லா மணவர்களையும்போல, பாடப் புத்தகங்களை எழுதும் பிரபலமான ஆசிரியர்களைச் சந்திக்கவோ தெரிந்துகொள்ளவோ எனக்கும் வாய்ப்புக்கிடைக்கவில்ல. வாய்ப்புக்கிடைத்தால் அவரைச் சந்திக்கவேண்டும் என்றும் படிக்கிற காலத்தில் எண்ணியிருந்தேன்.

லம்போ மூலமாக எட்டும் தூரத்தில் தான் அவர் இருந்தார். ஆனாலும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்தான் செல்லவேல் என்றும் தெரிந்திருக்கவில்லை.

இயற்கை எய்திவிட்ட அந்த ஆசிரியருக்கு அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பினைக் காணிக்கையாய் செலுத்துகிறேன்.

No comments:

Post a Comment