Thursday, July 31, 2014

தானாய் எல்லாம் மாறும் என்பது...

நடந்துவிட்ட அநியாயத்துக்கு என்றாவதொரு நாள் தானாக நியாயம் கிடைக்கும் என்று நம்புவது தான் மூடநம்பிக்கைகளுள் மிக மோசமான மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையிலிருந்தே இறுதித்தீர்ப்பு நாள், முன்வினைப்பயன், பாவபுண்ணியம், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பன போன்ற மூடக்கருத்துக்கள் உருவாகி வளர்கின்றன. கடவுள்-மத நம்பிக்கை அற்றவர்களிடமும் இந்த மூடநம்பிக்கை ஆழ ஊடுருவி இருக்கிறது.

இந்த மூடநம்பிக்கையை வளர்த்தெடுப்பதன்மூலம் அநியாயங்களுக்கெதிராக மக்கள் போராடுவதையும் கோபம் கொள்வதையும் தடுத்துவிடமுடியும்.

No comments:

Post a Comment